கிளிநொச்சியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடி பொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணி உரிமையாளர் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு தெரிவித்தபோது அதிரடிப்படையினரால் இவை நேற்று(19) முற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இதில் மோட்டர் செல்கள், மகசின்கள், கண்ணீர் புகைக்குண்டுகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.